10
இலங்கைசெய்திகள்

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

Share

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

இந்த அராசங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை பலப்படுத்துவதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தையும் வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கோரி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை பலப்படுத்த நாடாளுமன்ற அதிகாரம் தேவை என்ற வாதம் அரசியல் ரீதியில் பிழையானது என அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானங்களின் மூலம் சரியா திட்டங்களோ அனுபவங்களோ இன்றி செயற்படுவது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களை முறையாக மாற்றி அமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த அமைச்சரவை தீர்மானங்களுக்கு எவ்வித பொறுப்பும் கூற முடியாது என தற்போதைய அரசாங்கத்தினால் அறிவிக்க முடியாது என சரித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...