10
இலங்கைசெய்திகள்

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

Share

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

இந்த அராசங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை பலப்படுத்துவதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தையும் வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கோரி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை பலப்படுத்த நாடாளுமன்ற அதிகாரம் தேவை என்ற வாதம் அரசியல் ரீதியில் பிழையானது என அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானங்களின் மூலம் சரியா திட்டங்களோ அனுபவங்களோ இன்றி செயற்படுவது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களை முறையாக மாற்றி அமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த அமைச்சரவை தீர்மானங்களுக்கு எவ்வித பொறுப்பும் கூற முடியாது என தற்போதைய அரசாங்கத்தினால் அறிவிக்க முடியாது என சரித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...