10
இலங்கைசெய்திகள்

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

Share

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

இந்த அராசங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை பலப்படுத்துவதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தையும் வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கோரி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை பலப்படுத்த நாடாளுமன்ற அதிகாரம் தேவை என்ற வாதம் அரசியல் ரீதியில் பிழையானது என அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானங்களின் மூலம் சரியா திட்டங்களோ அனுபவங்களோ இன்றி செயற்படுவது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களை முறையாக மாற்றி அமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த அமைச்சரவை தீர்மானங்களுக்கு எவ்வித பொறுப்பும் கூற முடியாது என தற்போதைய அரசாங்கத்தினால் அறிவிக்க முடியாது என சரித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...