இலங்கைசெய்திகள்

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

10
Share

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

இந்த அராசங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை பலப்படுத்துவதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தையும் வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கோரி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை பலப்படுத்த நாடாளுமன்ற அதிகாரம் தேவை என்ற வாதம் அரசியல் ரீதியில் பிழையானது என அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானங்களின் மூலம் சரியா திட்டங்களோ அனுபவங்களோ இன்றி செயற்படுவது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களை முறையாக மாற்றி அமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த அமைச்சரவை தீர்மானங்களுக்கு எவ்வித பொறுப்பும் கூற முடியாது என தற்போதைய அரசாங்கத்தினால் அறிவிக்க முடியாது என சரித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...