tamilni 354 scaled
இலங்கைசெய்திகள்

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்

Share

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால், எரிவாயு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை 36 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அரசாங்கம் கால அவகாசம் பெற்றுள்ளது.

கடனாளிகளுடன் இலங்கை ஒரு உடன்படிக்கைக்கு வர முடிந்ததால், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தாததற்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அடுத்த ஐந்து முதல் ஆறு வருடங்களுக்குள் 37 வீதமான வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும்.

51 வீதமான கடன்களை 6 முதல் 21 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். ஏனைய 12 வீதத்தை 20 வருடங்களின் பின்னர் செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நிதியை இலங்கை மிகக் குறைவாகப் பயன்படுத்தினாலும், 2027ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு கையிருப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இடைவெளியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...