tamilni 354 scaled
இலங்கைசெய்திகள்

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்

Share

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால், எரிவாயு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை 36 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அரசாங்கம் கால அவகாசம் பெற்றுள்ளது.

கடனாளிகளுடன் இலங்கை ஒரு உடன்படிக்கைக்கு வர முடிந்ததால், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தாததற்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அடுத்த ஐந்து முதல் ஆறு வருடங்களுக்குள் 37 வீதமான வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும்.

51 வீதமான கடன்களை 6 முதல் 21 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். ஏனைய 12 வீதத்தை 20 வருடங்களின் பின்னர் செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நிதியை இலங்கை மிகக் குறைவாகப் பயன்படுத்தினாலும், 2027ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு கையிருப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இடைவெளியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...