tamilni 354 scaled
இலங்கைசெய்திகள்

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்

Share

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால், எரிவாயு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை 36 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அரசாங்கம் கால அவகாசம் பெற்றுள்ளது.

கடனாளிகளுடன் இலங்கை ஒரு உடன்படிக்கைக்கு வர முடிந்ததால், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தாததற்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அடுத்த ஐந்து முதல் ஆறு வருடங்களுக்குள் 37 வீதமான வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும்.

51 வீதமான கடன்களை 6 முதல் 21 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். ஏனைய 12 வீதத்தை 20 வருடங்களின் பின்னர் செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நிதியை இலங்கை மிகக் குறைவாகப் பயன்படுத்தினாலும், 2027ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு கையிருப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இடைவெளியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...