tamilni 230 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகளின் அசமந்தபோக்கு

Share

வடக்கில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகளின் அசமந்தபோக்கு

வட பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இந்த பிரச்சனை நீண்டகாலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரச்சினையானது எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

எனவே இவ்விடம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...