24 666108899d093
இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்பு: அவசர பணிப்புரை

Share

மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்பு: அவசர பணிப்புரை

வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மழையினால் மரக்கறிகள் பயிரிடப்பட்ட பல காணிகள் அழிவடைந்துள்ளதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அனைத்து பயிர் சேதங்கள் தொடர்பிலும் உடனடியாக அறிக்கை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்திக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதிகளவான மரக்கறி பயிரிடப்பட்ட நிலங்கள் அழிவடைவதால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதால் தோட்டக்கலை திட்டங்களை ஆரம்பிக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களங்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...