28 1
இலங்கைசெய்திகள்

அலி சப்ரியின் கருத்துக்களுடன் உடன்பட மறுத்து வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள்

Share

அலி சப்ரியின் கருத்துக்களுடன் உடன்பட மறுத்து வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் (Ali Sabry) அறிக்கை ஒன்று தொடர்பில், விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த் தலைமை தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்து வருவதோடு பொதுவான இலங்கை அடையாளத்தின் பாகமாக இருக்க மறுக்கிறது என்று அலி சப்ரி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சப்ரியின் அறிக்கை, சிங்கள பெரும்பான்மையினருடன் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கைக்கு செல்ல முயலும் தமிழர்களின் நீண்ட அரசியல் வரலாற்றைத் தவிர்த்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.

ஜி.ஜி பொன்னம்பலத்தின் 50:50 முன்மொழிவு. 1957 பண்டாரநாயக்க-செல்வநாயகம் மற்றும் 1965 டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற அடுத்தடுத்த முன்மொழிவுகள் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் துண்டிக்கப்பட்ட மற்றும் நீடித்த எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் கைவிடப்பட்டன.

2009இல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 1,69,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்,

இந்தநிலையில் 2010 தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ந்தும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

இதில் 2010ல் பொன்சேகாவையும், 2015ல் மைத்திரிபால சிறிசேனவையும், 2019ல் சஜித் பிரேமதாசவையும் ஆதரிப்பதும் உள்ளடங்கும் என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இப்படி தொடர்ந்து ஆதரவளித்த போதிலும், 13வது திருத்தத்தின் கீழ் இராணுவமயமாக்கல், பொறுப்புக்கூறல் அல்லது அதிகாரப் பகிர்வில் தமிழர் தாயகம் குறையவில்லை என்றும் குறித்த சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...