தேடப்படும் இரண்டு முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி சிறிசத செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.
அதன்படி, இந்தக் குற்றம் தொடர்பான விசாரணையின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் வரைப்படம் குற்றப் பதிவுப் பிரிவின் அதிகாரி ஒருவரால் வரையப்பட்டுள்ளது.
குறித்த வரைபடத்தினை வெளியிட்டு அவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேக நபர் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர், சுமார் 5 அடி 9 அங்குல உயரம், வெளிறிய நிறம் மற்றும் வட்ட முகம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஒரு ஆண் மற்றும் பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தக் குற்றம் தொடர்பான விசாரணையின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்ல உதவிய ஒரு சந்தேக நபர், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேலும் விசாரித்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் வரைப்படம் குற்றப் பதிவுப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியால் வரையப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரைப்படத்தில் உள்ள சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
அதற்கமைய, கொட்டாஞ்சேனை ஓ.ஐ.சியின் 071 – 8591571 என்ற தொலைபேசி எண் அல்லது கொட்டாஞ்சேனை குற்றப் புலனாய்வுப் பிரிவின் 071-8596386 என்ற தொலைபேசி எண் அல்லது குற்றப்பிரிவு குற்றப்பிரிவு அதிகாரியின் 074-0253623 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.