9 13
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Share

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

குறித்த நேரத்தில் திறமையான மற்றும் சரியான தீர்மானங்களை எடுக்க நீதிமன்றத்திற்கு ஆதரவளிக்குமாறு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று (ஜன. 7) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரி (tax)செலுத்தாத தனியார் நிறுவனமொன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்காத காரணத்தினால், நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், மாஜிஸ்திரேட் இந்த எச்சரிக்கையை விடுத்தார்

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தினேஷ் பெரேரா,உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சுகயீனமுற்றிருப்பதனால் நீதிமன்றில் முன்னலையாக முடியாது எனவும், அதற்காக நீதிமன்றில் மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்தார்.

ஏழு மில்லியன் வரியை செலுத்தாத தனியார் நிறுவனத்திற்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பிரதிவாதியான தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி வி.ஜி.கருணாசேன முன்னலையாகியதுடன் , இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டத்தரணி முன்வைத்த உண்மைகளை கவனத்தில் கொண்ட நீதவான், வழக்கை கிடப்பில் போடுமாறு உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...