9 13
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Share

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

குறித்த நேரத்தில் திறமையான மற்றும் சரியான தீர்மானங்களை எடுக்க நீதிமன்றத்திற்கு ஆதரவளிக்குமாறு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று (ஜன. 7) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரி (tax)செலுத்தாத தனியார் நிறுவனமொன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்காத காரணத்தினால், நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், மாஜிஸ்திரேட் இந்த எச்சரிக்கையை விடுத்தார்

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தினேஷ் பெரேரா,உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சுகயீனமுற்றிருப்பதனால் நீதிமன்றில் முன்னலையாக முடியாது எனவும், அதற்காக நீதிமன்றில் மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்தார்.

ஏழு மில்லியன் வரியை செலுத்தாத தனியார் நிறுவனத்திற்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பிரதிவாதியான தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி வி.ஜி.கருணாசேன முன்னலையாகியதுடன் , இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டத்தரணி முன்வைத்த உண்மைகளை கவனத்தில் கொண்ட நீதவான், வழக்கை கிடப்பில் போடுமாறு உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...