6 45
இலங்கைசெய்திகள்

சுஜீவவின் சொகுசு கார் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

சுஜீவவின் சொகுசு கார் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடமிருந்து (Sujeewa Senasinghe) கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனத்தை விடுவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID)உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

100 மில்லியன் ரூபா பிணை அடிப்படையில் குறித்த சொகுசு வாகனத்தை மீள ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த சொகுசு வாகனம் நீதிமன்ற உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான காரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

காரணிகளை பரிசீலித்த கோட்டை நீதவான், இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெறாததால், சம்பவம் தொடர்பான வழக்கை இன்றைய தினம் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...