இலங்கைசெய்திகள்

சுஜீவவின் சொகுசு கார் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

6 45
Share

சுஜீவவின் சொகுசு கார் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடமிருந்து (Sujeewa Senasinghe) கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனத்தை விடுவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID)உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

100 மில்லியன் ரூபா பிணை அடிப்படையில் குறித்த சொகுசு வாகனத்தை மீள ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த சொகுசு வாகனம் நீதிமன்ற உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான காரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

காரணிகளை பரிசீலித்த கோட்டை நீதவான், இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெறாததால், சம்பவம் தொடர்பான வழக்கை இன்றைய தினம் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...