7 48
இலங்கைசெய்திகள்

சாணக்கியனுக்கு வழக்கு தொடர்ந்து பிள்ளையான் விட்ட தவறு: நீதிமன்ற வழங்கிய அதிரடி உத்தரவு!

Share

சாணக்கியனுக்கு வழக்கு தொடர்ந்து பிள்ளையான் விட்ட தவறு: நீதிமன்ற வழங்கிய அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு (R.Shanakiyan) முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை (Sivanesathurai Chandrakanthan) 50,000 ரூபா வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்கிசை மாவட்ட நீதிமன்றம் இன்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், தன்னை அவமதிக்கும் வகையில் இரா. சாணக்கியன் கருத்து வெளியிட்டதாக கூறி அவருக்கு எதிராக கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் பிள்ளையான் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு தொடர்பில், இன்று சாணக்கியன் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் முன்னிலையானார். எனினும் குறித்த வழக்கைத் தாக்கல் செய்த பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதன்போது, எதிர்மறை தரப்பின் சட்டத்தரணி சுமந்திரன், இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்த நீதிமன்றத்துக்கு உடைமையாக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.

அத்துடன் வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், வழக்குத் தாக்கல் செய்த பிள்ளையானுக்கு, வழக்கு செலவீனமாக எதிர்த்தரப்புக்கு 50,000 ரூபாவினை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் குறித்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...