1
இலங்கைசெய்திகள்

ஆசிரியையான மனைவியின் அந்தரங்க காணொளியை மாணவனுக்கு அனுப்பிய கணவன்

Share

கொழும்பில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளியை மாணவர்களுக்கு அனுப்பிய கணவனான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியான ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோ எடுத்து, அவர் படிப்பிக்கும் பாடசாலை மாணவருக்கு வட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பியதாக கூறப்படும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு கூடுதல் நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க நேற்று உத்தரவிட்டார்.

கொழும்பு மருதானை பகுதியில் உள்ள இளம் ஆசிரியை ஒருவர் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாடு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணை அதிகாரிகள் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்ததை அடுத்து சந்தேக நபரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

தகாத படங்களைப் பார்ப்பதற்கு அடிமையானதாக கூறப்படும் சந்தேக நபர், தனது மனைவியுடனான அந்தரங்க உறவை இரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளரான ஆசிரியைக்கும் சந்தேக நபரான கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கணவன் – மனைவிக்கு இடையிலான உறவு தொடர்பான வீடியோவை வட்ஸ்அப் செயலி மூலம் தனக்கு கீழ் படிக்கும் மாணவருக்கு சங்கடப்படுத்தும் நோக்கில் சந்தேக நபர் அனுப்பியதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவர் மனச்சோர்வு எனப்படும் மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...