25 67c591bd8956f
இலங்கைசெய்திகள்

கேபிள் கார் திட்டம்: தேவையற்ற தலையீடுகளைத் தடுக்க கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் எழுத்தாணை கட்டளை!

Share

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, இடையூறு செய்வதையோ, தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக எழுத்தாணை கட்டளை (Writ Order) ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

கேபிள் கார் திட்ட நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ அல்லது இடையூறு செய்வதையோ பிரதேச செயலாளர் உடனடியாகத் தவிர்க்க வேண்டும்.

கம்பளை பிரதேச செயலாளர், நீதிமன்றச் செலவுக்காக ஒரு இலட்சம் ரூபாயை மனுதாரருக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஆம்பர் அட்வென்ச்சர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இந்த எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தது.

கம்பளை அம்புலுவாவ பிரதேசத்தில் கேபிள் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரச நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ள போதிலும், கம்பளை பிரதேச செயலாளர் அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது, சட்டத்தரணி அலி சப்ரி, குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி முழுமையாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமான அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும், அதில் தலையிட கம்பளை பிரதேச செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பிரதேச செயலாளர் ஏற்படுத்திய இடையூறுகள் காரணமாகத் திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவு செய்ய முடியவில்லை என்பதாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...