24 6694898c21328
இலங்கைசெய்திகள்

19ம் திருத்தச் சட்டம் குறித்த மனு தாக்கல் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாகாது: பெபரல் அமைப்பு

Share

19ம் திருத்தச் சட்டம் குறித்த மனு தாக்கல் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாகாது: பெபரல் அமைப்பு

19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு ஜனாதிபதி தேர்தல் நடத்தும் காலத்தில் தாக்கம் செலுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் அமைப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியல் அமைப்பு மீறப்படும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த மனு, ஜனாதிபதி தேர்தல் நடத்துவதனை காலம் தாழ்த்தப்படுவதற்கு ஏதுவாகாது என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த மனுவின் ஊடாக 19ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகம் குறித்த மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகம் குறித்து மக்கள் மத்தியில் நிச்சயமற்றத்தன்மையை உருவாக்க முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டுமென ரோஹன ஹெட்டியாரச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...