24 6694898c21328
இலங்கைசெய்திகள்

19ம் திருத்தச் சட்டம் குறித்த மனு தாக்கல் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாகாது: பெபரல் அமைப்பு

Share

19ம் திருத்தச் சட்டம் குறித்த மனு தாக்கல் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாகாது: பெபரல் அமைப்பு

19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு ஜனாதிபதி தேர்தல் நடத்தும் காலத்தில் தாக்கம் செலுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் அமைப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியல் அமைப்பு மீறப்படும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த மனு, ஜனாதிபதி தேர்தல் நடத்துவதனை காலம் தாழ்த்தப்படுவதற்கு ஏதுவாகாது என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த மனுவின் ஊடாக 19ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகம் குறித்த மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகம் குறித்து மக்கள் மத்தியில் நிச்சயமற்றத்தன்மையை உருவாக்க முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டுமென ரோஹன ஹெட்டியாரச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...