11 25
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆதரவை அறிவித்துள்ள பிரித்தானியா

Share

இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆதரவை அறிவித்துள்ள பிரித்தானியா

இலங்கை அதிகாரிகள் விரைவில் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம், இலங்கை அரசாங்கத்திற்கு அதன் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தாம் அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார அலுவலகம் புதுப்பித்துள்ளது.

 

இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

விருந்தகங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளிநாட்டவர்கள் அடிக்கடி செல்லும் இடங்கள் உட்பட கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

 

எனினும் இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ள சிலரால், தொழில்துறையை பாதிக்கும் வகையில் நிலைமை மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் பேட்ரிக் ஒப்புக்கொண்டார்.

 

இந்தநிலையில் அச்சுறுத்தல் தீர்க்கப்பட்டவுடன் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார அலுவலகம் ஆலோசனையை மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

 

2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மையைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கான கடும் பயண ஆலோசனையை பிரித்தானியா கடைப்பிடித்தபோதும். அந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...