24 665419470cfb0
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள வளம் தொடர்பில் போட்டியில் உலக நாடுகள்

Share

இலங்கையிலுள்ள வளம் தொடர்பில் போட்டியில் உலக நாடுகள்

இலங்கையின் மூலோபாய சொத்துக்கள் மற்றும் வளங்கள் மீது உலகளாவிய கவனம் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.

இந்தவகையில் நாட்டின் கிராஃபைட் (graphite) துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான போட்டியில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தற்போது குறித்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ள கனேடிய மற்றும் அவுஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்படும் புதிய முயற்சிகளாகும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, இலங்கையில் உயர்தர சிரை கிராஃபைட்டுக்கு வளமான வைப்புகள் உள்ளன.

அதிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட குழிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், நாட்டில் கிராஃபைட் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய (India) அரசு மற்றும் புவியியல். சுரங்க ஆய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு இடையில் ஆழமான கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...