16 22
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

Share

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.

நம்பகமான தரப்புக்கள் என்று கோடிட்டு இந்த செய்தியை கொழும்பின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இருவேறுபட்ட கருத்துக்கள் எழுந்தமையால், மத்திய குழுவின் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வேட்பாளருக்கு எதிராக ஐந்து உறுப்பினர்களும், ஆதரவாக மூன்று உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மற்றும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆகியோர் பரிந்துரைக்கு எதிராக வாக்களித்தனர்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆதம்பாவா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி அல்ல, வெளிநபர் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்தே இந்த நிராகரிப்பு நிகழ்ந்துள்ளது.

முன்னதாக, எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்துக்குள் இருந்து ஒருவரை, இந்த பதவிக்கு நியமிப்பதே பாரம்பரியம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...