2 44
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

Share

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

கடந்த அரசாங்கங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் கையாட்கள் பலர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டை விட்டு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இருந்து விசா பெற்றுக்கொண்டுள்ளதாகவும், சிலர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்கங்களின் போது தமது அரசியல் பலத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி பணம் சம்பாதித்த அரசியல்வாதிகள் இந்த நாட்டில் உள்ள தமது சொத்துக்களை இரகசியமாக விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கூட்டு முயற்சியில் ஈடுபட்டுவந்த இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வியாபாரங்களின் பங்குகளை பணமாக மாற்றி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதற்கு நேரடியாக பங்களித்த பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் சிலரும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான ஆயத்தங்களை இப்போதே மேற்கொண்டு வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தம்மை ஆட்சியில் அமர்த்த முயற்சிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பாதகமான சூழலை எதிர்கொள்வதாக முன்கூட்டியே ஊகித்த காரணத்தினால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....