ரணிலுடனான கலந்துரையாடலை புறக்கணிக்கும் தமிழ் தரப்பு
இலங்கைசெய்திகள்

ரணிலுடனான கலந்துரையாடலை புறக்கணிக்கும் தமிழ் தரப்பு

Share

ரணிலுடனான கலந்துரையாடலை புறக்கணிக்கும் தமிழ் தரப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனைக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நேற்று முன்தினம் (16.07.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று (18.07.2023) இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த கலந்துரையாடல் இன்று மாலை 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகக் கட்சியின் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்றைய தின கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 88
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மின்சாரக் கட்டணத்தில் நிலக்கரிச் சூழல் செலவுகளைச் சேர்க்கத் தடை: பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிரடி!

மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்கும்போது, நிலக்கரிச் சூழலால் (Coal conditions) ஏற்படும் மேலதிக செலவுகளை நுகர்வோர் கட்டணத்தில்...

world 87
உலகம்செய்திகள்

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அதிரடி மாற்றம்!

பாப் இசையின் மன்னர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மைக்கேல்’ (Michael) திரைப்படம்,...

world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...