13 18
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

Share

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச்செய்வது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள் ஒன்று வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்கப் பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் நேற்று கொழும்பு, அநுராதபுரம், கேகாலை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவொன்று நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை நிறைவில் வினாத்தாள் கசிந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் பரீட்சையை நடத்தத் தயங்கப்போவதில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
000 372X6VF
உலகம்செய்திகள்

ரஷ்யா-யுக்ரைன் போர்: அமெரிக்காவின் அமைதித் திட்டப் பேச்சுவார்த்தையில் பாரிய முன்னேற்றம்!

ரஷ்யா மற்றும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான...

12628814 airport
உலகம்செய்திகள்

நெதர்லாந்து விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் அச்சுறுத்தல்: விமான சேவை தடை!

ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள்...

Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...