6 41
இலங்கைசெய்திகள்

நாட்டிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு

Share

நாட்டிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு

நாட்டில் உள்ள சுற்றுலா வலயங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் விசேட பாதுகாப்புத் திட்டத்தை தொடர்ந்தும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த முன்முயற்சியானது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமன்றி பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உறுப்பினர்களையும் ஈடுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ மற்றும் திக்வெல்ல உள்ளிட்ட பிரபல சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அறுகம்பையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மாவனல்லை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...