10 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அநுரவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி: நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படை

Share

அநுரவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி: நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படை

தமது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க சதி நடந்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான நலிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்த சமூக ஊடகப்பதிவுகளை அவர் இதற்காக சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கட்சி நிதிக்காக வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டை ஜயதிஸ்ஸ மறுத்துள்ளார்.

அத்துடன், கட்சியை குறைமதிப்புக்கு உட்படுத்தும் போட்டிக் கட்சிகளின் பரந்த அரசியல் மூலோபாயத்தின் ஒரு பகுதியே இது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தியில் இருந்து 83 மாகாணசபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட போது 83 அனுமதிகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

எனினும் 2 அனுமதிகளை மாத்திரம் பெற்று எஞ்சிய 81 அனுமதிப்பத்திரங்களும் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

எனவே இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் உண்மைக்குப் புறம்பானது.

மாறாக,வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதே சுமத்தமுடியும் என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...