2
இலங்கைசெய்திகள்

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரணில்! ஓய்வு பெற விரும்பவில்லை

Share

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரணில்! ஓய்வு பெற விரும்பவில்லை

மக்கள் மாறிவிட்டார்கள், தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya)  தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் பல முறை நிகராரிக்கப்பட்டு, தனது தொகுதியிலேயே பல முறை தோல்விகண்ட ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எனக்கு எப்படி அரசமைப்பு தொடர்பில கற்பிக்க முடியும் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,

தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறவில்லை. தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்க்கையிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றார். ஓய்வு பெற விரும்பவில்லை.

மக்கள் மாறிவிட்டார்கள் என்பதையும் தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பொதுமக்களின் ஆணையே அரசமைப்பின் அடிப்படை.  இதனை புரிந்துகொள்ளாத ஒருவர் எனக்கு எப்படி அரசமைப்பு குறித்து கற்பிக்க முடியும்? அரசமைப்பினை நன்கறிந்த ஒருவர் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டார்.

தேசிய பேரவை நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிடமாட்டார், எனக்கு அரசமைப்பினை கற்பிப்பது என்றால் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்கவேண்டும்.

தங்களிற்கு அனைத்தும் தெரியும் ஏனையவர்களிற்கு எதுவும் தெரியாது என நினைத்து செயற்பட்ட தலைவர்களாலேயே இலங்கை அழிந்துபோனது.

அவ்வாறான அரசியல் கலாசாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது என  குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...