6 2
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

Share

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமையை ஒரு கட்சி என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை உள்ளது எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) கேள்வியெழுப்பியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமூக ஊடக ஆர்வலர்களை கைது செய்தது தவறாக நடந்துள்ளது. ஒரு நாடாக நாம் இன்று ஜனநாயகம் தொடர்பில் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கையில்(sri lanka) இருந்து உகாண்டாவுக்கு(uganda) ராஜபக்ச குடும்பம்(rajapaksa family) பணம் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பி, மக்களின் மனதை சிதைத்து, மக்கள் உள்ளங்களில் வெறுப்பை விதைத்தனர்.

ஒரு அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினரை வீதியில் அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறுப்பை விதைத்து, 75 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் அளவுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை ஏற்படுத்திய ஜனதா விமுக்தி பெரமுன(jvp) இப்போது சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குகிறது.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை கட்சி ரீதியாக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சமூக ஊடக ஆர்வலர்களின் கைது முற்றிலும் தவறான முறையில் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்காக இப்படிச் செய்ததற்காக  இலங்கை காவல்துறை வெட்கப்பட வேண்டும்.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் உரிமை என்ன என்பதை அவர்கள் மனசாட்சியுடன் கேட்க வேண்டும். மேலும் இது மிகவும் சோகமான மற்றும் தவறான நிலை என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...