6 2
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

Share

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமையை ஒரு கட்சி என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை உள்ளது எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) கேள்வியெழுப்பியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமூக ஊடக ஆர்வலர்களை கைது செய்தது தவறாக நடந்துள்ளது. ஒரு நாடாக நாம் இன்று ஜனநாயகம் தொடர்பில் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கையில்(sri lanka) இருந்து உகாண்டாவுக்கு(uganda) ராஜபக்ச குடும்பம்(rajapaksa family) பணம் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பி, மக்களின் மனதை சிதைத்து, மக்கள் உள்ளங்களில் வெறுப்பை விதைத்தனர்.

ஒரு அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினரை வீதியில் அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறுப்பை விதைத்து, 75 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் அளவுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை ஏற்படுத்திய ஜனதா விமுக்தி பெரமுன(jvp) இப்போது சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குகிறது.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை கட்சி ரீதியாக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சமூக ஊடக ஆர்வலர்களின் கைது முற்றிலும் தவறான முறையில் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்காக இப்படிச் செய்ததற்காக  இலங்கை காவல்துறை வெட்கப்பட வேண்டும்.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் உரிமை என்ன என்பதை அவர்கள் மனசாட்சியுடன் கேட்க வேண்டும். மேலும் இது மிகவும் சோகமான மற்றும் தவறான நிலை என அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...