image 405bd3350f
இலங்கைசெய்திகள்

இளநீர் வெட்டும் கத்தியால் 5 முறை குத்திக் கொலை: கணினிப் பொறியியலாளர் கைது!

Share

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணினிப் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை தெற்குத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை, கம்புருகமுவைச் சேர்ந்த 29 வயதுடைய வெலந்தகொட ஹேவகே சசித் தமால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை, வலான பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய கணினிப் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாணந்துறைப் பகுதியில் உள்ள தனியார் கணினிப் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருபவர் எனக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் சந்தேக நபருக்குக் கீழ் பணிபுரிந்ததாகவும், நிதித் தகராறு காரணமாகச் சந்தேக நபரின் வீட்டின் முன் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்துப் பாணந்துறைத் தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...