image 405bd3350f
இலங்கைசெய்திகள்

இளநீர் வெட்டும் கத்தியால் 5 முறை குத்திக் கொலை: கணினிப் பொறியியலாளர் கைது!

Share

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணினிப் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை தெற்குத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை, கம்புருகமுவைச் சேர்ந்த 29 வயதுடைய வெலந்தகொட ஹேவகே சசித் தமால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை, வலான பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய கணினிப் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாணந்துறைப் பகுதியில் உள்ள தனியார் கணினிப் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருபவர் எனக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் சந்தேக நபருக்குக் கீழ் பணிபுரிந்ததாகவும், நிதித் தகராறு காரணமாகச் சந்தேக நபரின் வீட்டின் முன் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்துப் பாணந்துறைத் தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...