32 2
இலங்கைசெய்திகள்

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்

Share

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்

அரச உர நிறுவனங்களான லங்கா உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 278 பேர் இன்று (18) முதல் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர்.

குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேற்படி, இரண்டு உர நிறுவனங்களும் இனி ஒரு நிறுவனமாக ஒரு தலைவர் மற்றும் ஒரு இயக்குநர் குழுவின் கீழ் செயல்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற 278 ஊழியர்களுக்கும் 8 இலட்சம் ரூபா தொடக்கம் 90 இலட்சம் ரூபா வரையான ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு கிரிபத்கொடையில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, இந்த கட்டாய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...