24 662adc1c3d2d6
இலங்கைசெய்திகள்

விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சி நிறைவு

Share

விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சி நிறைவு

பாதாள உலகக் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற முதலாவது பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது.

குறித்த அணியினரின் பயிற்சி நிறைவு வைபவம் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தலைமையில் களுத்துறை கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் நேற்று (25) நடைபெற்றுள்ளது.

இதன்போது பயிற்சியை நிறைவு செய்த 96 சிறப்பு மோட்டார் சைக்கிள் சாரதிகள், 48 மோட்டார் சைக்கிள்களுடன் இங்கு கலைந்து சென்றனர்.

கலைந்து சென்ற அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், அவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் புள்ளிகளைக் கண்டறிந்து அவர்களின் நடவடிக்கைகளை ஒடுக்குவதே இந்தப் படையணியின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...