24 662adc1c3d2d6
இலங்கைசெய்திகள்

விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சி நிறைவு

Share

விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சி நிறைவு

பாதாள உலகக் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற முதலாவது பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது.

குறித்த அணியினரின் பயிற்சி நிறைவு வைபவம் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தலைமையில் களுத்துறை கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் நேற்று (25) நடைபெற்றுள்ளது.

இதன்போது பயிற்சியை நிறைவு செய்த 96 சிறப்பு மோட்டார் சைக்கிள் சாரதிகள், 48 மோட்டார் சைக்கிள்களுடன் இங்கு கலைந்து சென்றனர்.

கலைந்து சென்ற அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், அவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் புள்ளிகளைக் கண்டறிந்து அவர்களின் நடவடிக்கைகளை ஒடுக்குவதே இந்தப் படையணியின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....