17 21
இலங்கைசெய்திகள்

2023 இல் காவல்துறையால் தீர்க்கப்படாத ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

Share

2023 இல் காவல்துறையால் தீர்க்கப்படாத ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

2023 ஆம் ஆண்டு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 2448 பொது முறைப்பாடுகளில் 77 வீதமானவை அந்த வருடத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த ஆண்டு பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில் 1887 முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு பெறப்பட்ட பொதுப் முறைப்பாடுகளில் 561க்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில் 2023ஆம் ஆண்டில் 1090 விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் பொதுப் முறைப்பாடுகளில் பெரும்பாலானவை காவல்துறையின் செயற்பாடுகளின்மை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாரபட்சமான முறைப்பாடுகள் கூறப்பட்டுள்ளது.

மொத்த முறைப்பாடுகளில் 33 சதவீதம் காவல்துறையினர் செயல்படாதது தொடர்பான முறைப்பாடுகள் என்றும், 20 சதவீதம் காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...