24 66612adb73922
இலங்கைசெய்திகள்

அதிகரித்து வரும் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள்

Share

அதிகரித்து வரும் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள்

ஒழுக்காற்று விடயத்தில் பல்வேறு முறைகேடுகளை மேற்கொள்ளும் பொலிஸ் (Police) உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில், பொலிஸ் அதிகாரிகள் தவறான நடத்தைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.

இந்தநிலையில் ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பொலிஸ் திணைக்களத்தினுள் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் ஒழுக்கம் குறித்து வேறு எந்த அரசு நிறுவனத்தையும் விட திணைக்களம் அதிக அக்கறை கொண்டுள்ளது. எனவே பொலிஸ் அதிகாரிகளால் சிறிய ஒழுங்கு மீறல்கள் நடந்தாலும், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கையில் பொலிஸாருக்கு எதிராக மொத்தம் 2,448 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸாரின் செயலற்ற தன்மைக்காக 810 முறைப்பாடுகளும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக 563 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாரபட்ச செயற்பாடு தொடர்பில் 450 முறைப்பாடுகளும், லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 112 முறைப்பாடுகளும், பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கியதற்காக 93 முறைப்பாடுகளும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 55 முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சட்டவிரோத காவல் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...