10 39
இலங்கைசெய்திகள்

ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிராக காவல்நிலையம் சென்ற மனைவி

Share

ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிராக காவல்நிலையம் சென்ற மனைவி

ப்ராடோ ஜீப் ஒன்று திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக அவரது மனைவியால் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி ஒரு சட்டத்தரணி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முறைப்பாட்டில், தனது வாகனம் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும், அது சட்டவிரோத செயல்களில் ஈடுபடலாம் என்ற பலத்த சந்தேகம் காணப்படுவதாகவும் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது கணவர் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதால், தனது பயண வசதிகளும் தடைபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது கணவரான நாடாளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு இருப்பதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

அந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பலமுறை எச்சரித்தும், கணவர் உறவை நிறுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், பொறுத்துக்கொள்ள முடியாததால், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...