இலங்கைசெய்திகள்

ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிராக காவல்நிலையம் சென்ற மனைவி

10 39
Share

ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிராக காவல்நிலையம் சென்ற மனைவி

ப்ராடோ ஜீப் ஒன்று திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக அவரது மனைவியால் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி ஒரு சட்டத்தரணி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முறைப்பாட்டில், தனது வாகனம் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும், அது சட்டவிரோத செயல்களில் ஈடுபடலாம் என்ற பலத்த சந்தேகம் காணப்படுவதாகவும் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது கணவர் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதால், தனது பயண வசதிகளும் தடைபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது கணவரான நாடாளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு இருப்பதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

அந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பலமுறை எச்சரித்தும், கணவர் உறவை நிறுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், பொறுத்துக்கொள்ள முடியாததால், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....