10 39
இலங்கைசெய்திகள்

ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிராக காவல்நிலையம் சென்ற மனைவி

Share

ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிராக காவல்நிலையம் சென்ற மனைவி

ப்ராடோ ஜீப் ஒன்று திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக அவரது மனைவியால் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி ஒரு சட்டத்தரணி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முறைப்பாட்டில், தனது வாகனம் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும், அது சட்டவிரோத செயல்களில் ஈடுபடலாம் என்ற பலத்த சந்தேகம் காணப்படுவதாகவும் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது கணவர் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதால், தனது பயண வசதிகளும் தடைபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது கணவரான நாடாளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு இருப்பதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

அந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பலமுறை எச்சரித்தும், கணவர் உறவை நிறுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், பொறுத்துக்கொள்ள முடியாததால், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...