17 30
இலங்கைசெய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை

Share

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானை தாக்குதலினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான இழப்பீடுகள் குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, அனைத்து இழப்பீடுகளையும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில், நாடு முழுவதும் நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு கணிசமான சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரையில் பாதிக்கப்பட்ட 80 சதவீதமான விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 80 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஜனவரி 05 ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீட்டுத் தொகையை வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மிகக் கவனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், 2024-2025 பெரும்போகம் தொடர்பான இழப்பீடுகளை பெப்ரவரி மாத ஆரம்பத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...