இலங்கைசெய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை

17 30
Share

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானை தாக்குதலினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான இழப்பீடுகள் குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, அனைத்து இழப்பீடுகளையும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில், நாடு முழுவதும் நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு கணிசமான சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரையில் பாதிக்கப்பட்ட 80 சதவீதமான விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 80 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஜனவரி 05 ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீட்டுத் தொகையை வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மிகக் கவனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், 2024-2025 பெரும்போகம் தொடர்பான இழப்பீடுகளை பெப்ரவரி மாத ஆரம்பத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...