11 24
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு : இந்த மாத இறுதியில் வங்கிகளுக்கு வரப்போகும் பணம்

Share

விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு : இந்த மாத இறுதியில் வங்கிகளுக்கு வரப்போகும் பணம்

கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

பயிர் சேத மதிப்பீடுகளில் சுமார் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்(jaffna), கிளிநொச்சிkilinochchi), திருகோணமலை (trincomale)மற்றும் மன்னார் (mannar)போன்ற பகுதிகளில் பயிர் சேத மதிப்பீடுகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.

கமநல சேவை நிலையங்களிலிருந்து இறுதி பரிந்துரைக்கப்பட்ட இழப்பீட்டு ஆவணங்கள் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தலைவர் மேலும் தெரிவித்தார்.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பங்களிப்புடன் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பரில் இருந்து தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அதனாலேற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாடளாவிய ரீதியில் விவசாயிகளின் நெல் உட்பட பிற தானிய பயிர்ச்யெ்கை அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...