12 13
இலங்கைசெய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான நற்செய்தி

Share

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான நற்செய்தி

நாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளைப் பரிசோதித்து நட்டஈடு வழங்கும் செயற்பாடு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை (agricultural and agrarian insurance board) தெரிவித்துள்ளது.

அத்துடன் பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,239 விவசாயிகளுக்காக 114 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்குக் கிடைக்கப் பெற்ற பரிந்துரை பாதிப்பு விண்ணப்பங்களுக்கு அமைவான நிதி அவர்களின் வங்கி கணக்கிற்கு வைப்பிலிடும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்காக 3,272 விவசாயிகளுக்காக 70 மில்லியன் ரூபா அவர்களது கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளுக்கமைய 8,705 விவசாயிகளுக்காக 122 மில்லியன் ரூபா நேற்றைய தினம் (10) விவசாயிகளின் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இது தவிர, நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக நெல், பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நட்டஈட்டை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...