1 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இருந்து யாழ் வந்த அதிசொகுசு பேருந்து கோர விபத்து – ஐவர் படுகாயம்!

Share

கொழும்பில் இருந்து யாழ் வந்த அதிசொகுசு பேருந்து கோர விபத்து – ஐவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து (Colombo) பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, லாண்ட் மாஸ்டர் வாகனத்தை மோதித்தள்ளியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று (18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும்இ அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும் சொகுசு பேருந்தின் நடத்துனருமே படுகாயம் அடைந்தனர்.

சொகுசு பேருந்தின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பேருந்தில் இருந்தவர்களை பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர்.

காயம் அடைந்தவர்கள் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....