1 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இருந்து யாழ் வந்த அதிசொகுசு பேருந்து கோர விபத்து – ஐவர் படுகாயம்!

Share

கொழும்பில் இருந்து யாழ் வந்த அதிசொகுசு பேருந்து கோர விபத்து – ஐவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து (Colombo) பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, லாண்ட் மாஸ்டர் வாகனத்தை மோதித்தள்ளியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று (18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும்இ அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும் சொகுசு பேருந்தின் நடத்துனருமே படுகாயம் அடைந்தனர்.

சொகுசு பேருந்தின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பேருந்தில் இருந்தவர்களை பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர்.

காயம் அடைந்தவர்கள் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
09 10
இலங்கைசெய்திகள்

நீர் கட்டண உயர்வு இல்லை: ஜூன் மாதம் கட்டணத் திருத்தம் – அமைச்சர் சுசில் ரணசிங்க!

தற்போதைய சூழலில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று வீடமைப்பு, நிர்மாண மற்றும்...

08 10
செய்திகள்இலங்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின்...

06 10
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பயணச் சிக்கல்களால் நேர்ந்த மாற்றம்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், தவிர்க்க முடியாத...

05 11
செய்திகள்இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு: 12.5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 3,990 ஆக அதிகரிப்பு!

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, மார்ச் 10, 2026 நள்ளிரவு...