24 6600dc54722de
இலங்கைசெய்திகள்

கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்படும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்

Share

கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்படும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்

வார இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் முயற்சியின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் செயற்பாடுகளையும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மைத்திரியின் அரசியல் சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...