tamilni 85 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு அதிர்ச்சி

Share

கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு அதிர்ச்சி

ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் கத்தியுடன் வீடொன்றில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர் கணவன் மனைவியினால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விடியற்காலையில் நிஞ்ஜா வேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

அங்கு, கொள்ளையன் அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்கிவிட்டு ஓட முயன்றுள்ளார். அப்போது, ​​வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் கொள்ளையனுடன் சண்டையிட்டு, மடக்கிப் பிடித்தனர்.

போராட்டத்தின் போது கொள்ளைக்காரரின் கையிலிருந்த மன்னா கத்தியை வீட்டின் உரிமையாளர் பிடுங்கி அதன் மூலம் கொள்ளையனை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த கொள்ளையன் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே கொள்ளையடிக்க வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...