13 23
இலங்கைசெய்திகள்

கொழும்பில் விடுதிக்குள் ஏற்பட்ட மோதல்: ஒருவர் கொலை – பல்கலைக்கழக மாணவர் கைது

Share

கொழும்பில் விடுதிக்குள் ஏற்பட்ட மோதல்: ஒருவர் கொலை – பல்கலைக்கழக மாணவர் கைது

மருதானை – தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள தங்கும் விடுதியில் வர்த்தகர் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 19 வயது மாணவன் மருதானை பொலிஸாரால் நேற்று முன்தினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் வெலிமடை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த 44 வயதுடைய வர்த்தகர் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகர் மற்றும் பல்கலைக்கழக மாணவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகர் விடுதிக்கு வந்து பல்கலைக்கழக மாணவனிடம் விளக்குகளை அணைக்குமாறு கூறியுள்ளார். எனினும் தனது கற்றல் வேலைகளை முடித்த பின்னர் விளக்குகளை அணைப்பதாக மாணவன் கூறியுள்ளார்.

இதன்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மாணவன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வர்த்தகரை தாக்கியுள்ளார்.

இதன்போது கடும் காயங்களுக்கு உள்ளான வர்த்தகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இஷாந்த குமார அபலகொடுவவின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...