23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

Share

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தங்கள் அதிகபட்ச பலத்தை பயன்படுத்தி வருகின்றன.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்க்க இரகசிய பேச்சுவார்த்தைகளும் இந்நாட்களில் இடம்பெற்று வருகின்றனர்.

அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை உறுதியளித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஈர்க்க பல கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயருக்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில், இந்தத் வாக்கெடுப்பு மிகவும் பரபரப்பான திருப்பத்தை எடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாததால், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

கொழும்பு மாநகர சபையின் நிர்வாக அதிகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், எதிர்க்கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருப்பதால், ஆட்சி அதிகாரத்தை பெற உரிமை உண்டு என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...