24 671ce4d358ed4
இலங்கைசெய்திகள்

கொழும்பு – யாழ். தொடருந்து சேவை மீள ஆரம்பம்

Share

கொழும்பு – யாழ். தொடருந்து சேவை மீள ஆரம்பம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்குக்கான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி 28.10.2024 திகதி முதல் இரண்டு தொடருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி புகையிரதமும், பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிய ரஜரட்ட ரஜின புகையிரதமும் சனிக்கிழமை முதல் வடக்கு பாதையில் பயணிக்கவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்காக கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை கடந்த மாதம் 19 மற்றும் 21 இரு திகதிகளில் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

எனினும் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டகுறித்த சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
7 6
உலகம்செய்திகள்

ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்..

அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கியமான மூன்று அணு ஆயுத தளங்களை அழித்த பிறகு, ஈரான் மீண்டும்...

4 8
உலகம்செய்திகள்

ஈரானின் அணுஉலைகளை தாக்கிய அமெரிக்கா: ஈரான் கொடுத்த முக்கிய விளக்கம்..!

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது. மத்திய கிழக்கில் போர்...

5 7
உலகம்செய்திகள்

ஈரானின் தாக்குதல் அச்சம் : அமெரிக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு

அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி...

2 10
இலங்கைசெய்திகள்

யாழ். வலிகாமம் வடக்கில் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம்

யாழ்ப்பாணம் – வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய...