tamilni 201 scaled
இலங்கைசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்ட பெண்

Share

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் அதிகாரி ஒருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாட்டில் இயங்கி வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மூத்த சகோதரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 வயதான சந்தேக நபர் கொழும்பில் விசா ஆலோசனை அலுவலகம் ஒன்றையும், கட்டட நிர்மாண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி நான்கு பிள்ளைகளுடன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர், அவர் உயிரிழந்த பெண்ணுடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும், பெண் கொலை செய்யப்பட்ட நாள் காலை முதல் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார்.

செவ்வாய்கிழமை மதியம் கொலை செய்யப்பட்ட பெண் தன்னுடன் வர மறுத்து முச்சக்கர வண்டியில் செல்ல முற்பட்டதால் ஆத்திரம் காரணமாக தனது காரில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து கழுத்தை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருப்பினும் அவரை கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டதை அறிந்ததாகவும், அதனை தொடர்ந்து வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...