11 3 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

Share

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உத்தரவின் பேரில் இரு வாடகை கொலையாளிகளால் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு தாக்குதல்களும் T-56 ஆயுதத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டதுடன், இரண்டு தாக்குதல்களிலும் ஒரே கொலையாளிகள் ஈடுபட்டுள்ளதாக சிசிடிவி காணொளி காட்சிகள் மூலம் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் பின்னர், வாடகைக் கொலையாளிகள் 25 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து அம்பலாங்கொட பிரதேசத்திற்கு வந்து, இரவு 9.30 மணியளவில் தமது இரண்டாவது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இரவு வேளைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால், சிசிடிவி காணொளி காட்சிகளும் தெளிவாக தெரியவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வரும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் போதைப்பொருள் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பிடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம், நபர் ஒருவரை கொலை செய்தமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும் 4 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 6 பேர் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிடிகல – குருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்திருந்ததுடன்,  அவர் வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வந்திருந்த ஒருவரென தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஊழியரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரின் 21 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....