கொழும்பு பொரளை பகுதியில் இன்று மாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சந்தேகநபர்கள் குறித்த எதுவித தகவலும் இதுவரை தெரியவரவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.