நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி!

Share

நீரில் மூழ்கி காணாமல்போன யுவதி!

அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய பாத்திமா ஃபஸ்னா என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி உட்பட 7 பேர் நேற்று மதியம் அத்தனகலு ஓயாவில் குளிப்பதற்கு சென்றிருந்த நிலையில், யுவதி செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதி தவறி விழுந்த உடன் தனக்கு நீச்சல் தெரியாது எனக்கூறி உதவிக்கோரியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து யுவதியை தேடும் பணியை பொலிஸார் முன்னெடுத்திருந்த போதும் முயற்சி பயனளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யுவதியை தேடும் பணியை தொடர கடற்படையின் நீர்மூழ்கிக்குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...