24 663c3512884cc
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இளம் பெண்ணை நேர்காணலுக்கு அழைத்து கோடீஸ்வரர் மோசமான செயல்

Share

கொழும்பில் இளம் பெண்ணை நேர்காணலுக்கு அழைத்து கோடீஸ்வரர் மோசமான செயல்

அதிக சம்பளம் தருவதாக கூறி நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட திருமணமான இளம் பெண்ணை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று (08) கோட்டை நீதவான் கோசல சேனாதீரவிடம் இதனை அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தேவையான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் வாட்ஸ்அப் மூலம் முறைப்பாடு செய்தவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும், நேர்முகப்பரீட்சைக்கு வருமாறு அறிவித்ததன் பிரகாரம், திருமணமான இளம் பெண் தனது கணவருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன்போது இளம் பெண்ணின் கணவரை கீழே தடுத்து வைத்துவிட்டு மேல்மாடி அறைக்கு அழைத்துச் சென்று மேற்படி குற்றத்தை செய்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...