24 663c3512884cc
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இளம் பெண்ணை நேர்காணலுக்கு அழைத்து கோடீஸ்வரர் மோசமான செயல்

Share

கொழும்பில் இளம் பெண்ணை நேர்காணலுக்கு அழைத்து கோடீஸ்வரர் மோசமான செயல்

அதிக சம்பளம் தருவதாக கூறி நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட திருமணமான இளம் பெண்ணை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று (08) கோட்டை நீதவான் கோசல சேனாதீரவிடம் இதனை அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தேவையான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் வாட்ஸ்அப் மூலம் முறைப்பாடு செய்தவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும், நேர்முகப்பரீட்சைக்கு வருமாறு அறிவித்ததன் பிரகாரம், திருமணமான இளம் பெண் தனது கணவருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன்போது இளம் பெண்ணின் கணவரை கீழே தடுத்து வைத்துவிட்டு மேல்மாடி அறைக்கு அழைத்துச் சென்று மேற்படி குற்றத்தை செய்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...