8 30
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் தவிக்கும் மக்கள்

Share

கொழும்பில் பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் தவிக்கும் மக்கள்

கொழும்பு தடயவியல் மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடத்தப்படும் பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்தவர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டவர்களின் பிரேத பரிசோதனைகள் பிற்பகல் 3.00 மணி வரை மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் வாடகை அடிப்படையில் வாகனங்களுடன் வைத்தியசாலைக்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் மறுநாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

மேலும், மரண விசாரணை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனைகள் வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதுடன் பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட பிரேத பரிசோதனை பதிவுகள் வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணி வரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...