rtjy 70 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி

Share

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பேருந்து மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தெனியாயவிலிருந்து கொழும்பு வந்து கொழும்பிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பேருந்தில் பயணித்தவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், ஐவர் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிந்தவர்களுக்கான இறுதிச்சடங்கினை மேற்கொள்ள தலா ஐந்து இலட்சம் ரூபா வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளது. .

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணித்த மாணவர்கள் பலர் காயமடைந்த நிலையில் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

15 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், காயமடைந்த நான்கு பயணிகள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...