6 40
இலங்கைசெய்திகள்

தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி – துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

Share

தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி – துண்டிக்கப்பட்ட போக்குவரத்து\

கடுகதி தொடருந்தில் யானைக் கூட்டம் மோதியதால் மட்டக்களப்பு (Batticaloa) மார்க்கத்தின் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து கல்ஓயா பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது

இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகள் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் தொடருந்து தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த புலதிசி தொடருந்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தடம் புரண்ட தொடருந்தின் இயந்திரத்தை மீள் தடமேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...