11 18
இலங்கைசெய்திகள்

கொள்கலன் விடுவிப்பு மோசடி! அநுர தரப்பு மீது விமல் பகிரங்க குற்றச்சாட்டு

Share

கொள்கலன் விடுவிப்பு மோசடியில் கிடைக்கப்பெற்ற பணம் எவ்வளவு என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும், அதில் கிடைக்கப்பெற்ற இலாபம் அநுரகுமாரவுக்கா? அல்லது வசந்த சமரசிங்கவுக்கா? சென்றடைந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரிசி இறக்குமதியிலும் தற்போதைய அரசாங்கம் மோசடி செய்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலாே அரிசிக்குக்கு 60 ரூபா வரி அறவிட்டால், இறக்குமதி செய்பவருக்கு எந்தளவு இலாபம் மீதமாகிறது?

அநுரகுமாரவுக்கா அல்லது வசந்த சமரசிங்கவுக்கா? கொள்கலன் விடுவிப்பு மோசடியில் கிடைக்கப்பெற்ற பணம் எவ்வளவு என யாருக்கும் தெரியாது.

அண்மைக்காலத்தில் இடம்பெற்ற பாரிய பண மாேசடி இதுவாகும்.

மற்றவர்களின் குறைகளை தேடிக்கொண்டும், கதைத்துக்கொண்டும் இருக்கும் கிணற்றடியில் கலந்துரையாடும் ஒரு அரசாங்கமாகும்.

இதனைத் தவிர 7 மாதங்களில் இவர்கள் எதை செய்திருக்கிறார்கள் என கேட்கிறேன்.

அதனால் மக்கள் இவர்கள் மீது பாரிய நம்பிக்கை வைத்தே வாக்களித்தார்கள். வணங்கப்போன விகாரை தலையில் இடிந்து விழுந்தால் ஏற்படுகின்ற கோபம், வேறு ஒரு இடத்தில் இடிந்து விழுவதைவிட அதிகமாகும்.

மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகமான சபைகளுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

இந்நிலையில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் அவ்வாறன சபைகளை ஆளும் அரசாங்கம் ஆட்சி செய்வதாக இருந்தால், அவர்களுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை.

அதேநேரம் எதிர்க்கட்சியில் ஏதாவது கட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தால், அவர்களுக்கு நிபந்தனையும் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்.

Share
தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...